Loading date... | Loading Hijri date... | Loading time...

العاديات

தமிழ் Translation with Arabic Quran Text

தமிழ் العربية
1 பூமி அதன் நிலநடுக்கத்தால் கடுமையாக குலுக்கப்படும்போது, وَٱلْعَٰدِيَٰتِ ضَبْحًۭا. ﴿1﴾
2 இன்னும், (விரைந்து ஓடும்போது தமது லாடங்களால்) தீப்பொறிகளை மூட்டுகின்ற குதிரைகள் மீது சத்தியமாக, فَٱلْمُورِيَٰتِ قَدْحًۭا. ﴿2﴾
3 இன்னும், அதிகாலையில் (எதிரிகள் மீது) பாய்ந்து தாக்குகின்ற குதிரைகள் மீது சத்தியமாக, فَٱلْمُغِيرَٰتِ صُبْحًۭا. ﴿3﴾
4 ஆக, அவை அதி(காலையி)ல் புழுதியைக் கிளப்பின. فَأَثَرْنَ بِهِۦ نَقْعًۭا. ﴿4﴾
5 ஆக, அதி(காலையி)ல் (எதிரிகளின்) கூட்டத்திற்கு நடுவில் நுழைந்தன. فَوَسَطْنَ بِهِۦ جَمْعًا. ﴿5﴾
6 நிச்சயமாக மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவன் ஆவான். إِنَّ ٱلْإِنسَٰنَ لِرَبِّهِۦ لَكَنُودٌۭ. ﴿6﴾
7 இன்னும், நிச்சயமாக அவன் அதற்கு சாட்சியாக இருக்கிறான். وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌۭ. ﴿7﴾
8 நிச்சயமாக அவன் செல்வத்தை நேசிப்பதில் கடினமானவன் ஆவான். وَإِنَّهُۥ لِحُبِّ ٱلْخَيْرِ لَشَدِيدٌ. ﴿8﴾
9 புதைகுழிகளில் உள்ளவர்கள் எழுப்பப்படும்போது (தன் நிலைமை என்னவாகும் என்பதை மனிதன்) அறியவேண்டாமா? ۞ أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِى ٱلْقُبُورِ. ﴿9﴾
10 இன்னும், நெஞ்சங்களில் உள்ளவை பிரித்தறியப்படும்போது (தன் நிலைமை என்னவாகும் என்பதை மனிதன்) அறியவேண்டாமா? وَحُصِّلَ مَا فِى ٱلصُّدُورِ. ﴿10﴾
11 நிச்சயமாக அவர்களுடைய இறைவன் அந்நாளில் அவர்களை ஆழ்ந்தறிபவன் ஆவான். إِنَّ رَبَّهُم بِهِمْ يَوْمَئِذٍۢ لَّخَبِيرٌۢ. ﴿11﴾