عبس
தமிழ் Translation with Arabic Quran Text
| தமிழ் | العربية |
|---|---|
| 1 (தீயோரின் உயிர்களைக்) கடுமையாகப் பறிப்பவர்கள் மீது சத்தியமாக! | عَبَسَ وَتَوَلَّىٰٓ. ﴿1﴾ |
| 2 அவரிடம் பார்வையற்றவர் வந்ததற்காக. | أَن جَآءَهُ ٱلْأَعْمَىٰ. ﴿2﴾ |
| 3 (நபியே!) நீர் எப்படி அறிவீர், (உம்மிடம் வந்த) அ(ந்த கண்தெரியாத)வர் பரிசுத்தமடையலாம் அல்லவா? | وَمَا يُدْرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ. ﴿3﴾ |
| 4 அல்லது (உம்மிடம்) அவர் அறிவுரை பெறுவார். ஆக, (அந்த) அறிவுரை அவருக்குப் பலனளிக்கலாம் அல்லவா? (அப்படி இருக்க நீர் அவரை விட்டு எப்படி முகம் திருப்பினீர்?) | أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكْرَىٰٓ. ﴿4﴾ |
| 5 ஆக, எவன் (தன்னை அல்லாஹ்வின் அருளை விட்டுத்) தேவையற்றவனாகக் கருதினானோ, | أَمَّا مَنِ ٱسْتَغْنَىٰ. ﴿5﴾ |
| 6 நீர் அவனை (வரவேற்க) முன்னோக்குகிறீர். | فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ. ﴿6﴾ |
| 7 அவன் (இஸ்லாமை ஏற்று) பரிசுத்தமடையாமல் இருப்பது உம்மீது (குற்றம்) இல்லை. | وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ. ﴿7﴾ |
| 8 ஆக, எவர் உம்மிடம் (மறுமை மீது ஆசைப்பட்டு கல்வி கற்பதில்) விரைந்தவராக வந்தாரோ, | وَأَمَّا مَن جَآءَكَ يَسْعَىٰ. ﴿8﴾ |
| 9 அவரோ (அல்லாஹ்வைப்) பயப்படுகிறவராக, | وَهُوَ يَخْشَىٰ. ﴿9﴾ |
| 10 ஆக, அவரை நீர் அலட்சியப்படுத்துகிறீர். | فَأَنتَ عَنْهُ تَلَهَّىٰ. ﴿10﴾ |
| 11 அவ்வாறல்ல! நிச்சயமாக இ(ந்த அத்தியாயமான)து ஓர் அறிவுரை ஆகும். | كَلَّآ إِنَّهَا تَذْكِرَةٌۭ. ﴿11﴾ |
| 12 ஆகவே, யார் (நேர்வழி பெற) நாடுகிறாரோ (அவர்) இதன் மூலம் நல்லுபதேசம் பெறுவார். | فَمَن شَآءَ ذَكَرَهُۥ. ﴿12﴾ |
| 13 (இந்த வேதம்) கண்ணியமான ஏடுகளில், | فِى صُحُفٍۢ مُّكَرَّمَةٍۢ. ﴿13﴾ |
| 14 உயர்வான, தூய்மையான ஏடுகளில் இருக்கிறது. | مَّرْفُوعَةٍۢ مُّطَهَّرَةٍۭ. ﴿14﴾ |
| 15 அது (வானவர்களில்) எழுதுபவர்களின் கைகளில் பாதுகாக்கப்பட்டுள்ளது. | بِأَيْدِى سَفَرَةٍۢ. ﴿15﴾ |
| 16 அவர்கள் கண்ணியவான்கள், நல்லவர்கள். | كِرَامٍۭ بَرَرَةٍۢ. ﴿16﴾ |
| 17 (ஏக இறைவனை நிராகரிக்கும்) மனிதன் அழியட்டும்! அவன் எவ்வளவு நன்றி கெட்டவனாக இருக்கிறான். | قُتِلَ ٱلْإِنسَٰنُ مَآ أَكْفَرَهُۥ. ﴿17﴾ |
| 18 எந்தப் பொருளிலிருந்து அல்லாஹ் அவனைப் படைத்தான்? | مِنْ أَىِّ شَىْءٍ خَلَقَهُۥ. ﴿18﴾ |
| 19 விந்திலிருந்து அவனைப் படைத்தான். இன்னும் (பல நிலைகளில்) அவனை அமைத்தான். | مِن نُّطْفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ. ﴿19﴾ |
| 20 பிறகு, (அவன் தாயின் வயிற்றிலிருந்து வெளியேறுவதற்குரிய) பாதையை எளிதாக்கினான். | ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ. ﴿20﴾ |
| 21 பிறகு, அவனை மரணிக்கச் செய்தான்; அவனைப் புதைக் குழியில் தள்ளினான். | ثُمَّ أَمَاتَهُۥ فَأَقْبَرَهُۥ. ﴿21﴾ |
| 22 பிறகு, அவன் நாடியபோது அவனை உயிர்ப்பிப்பான். | ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ. ﴿22﴾ |
| 23 அவ்வாறல்ல! அல்லாஹ் அவனுக்குக் கட்டளையிட்டதை அவன் நிறைவேற்றவில்லை. | كَلَّا لَمَّا يَقْضِ مَآ أَمَرَهُۥ. ﴿23﴾ |
| 24 ஆகவே, மனிதன் தன் உணவின் பக்கம் (சிந்தித்துப்) பார்க்கட்டும்! | فَلْيَنظُرِ ٱلْإِنسَٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ. ﴿24﴾ |
| 25 நிச்சயமாக நாம் (பூமியின் மீது) மழை நீரை பொழிந்தோம். | أَنَّا صَبَبْنَا ٱلْمَآءَ صَبًّۭا. ﴿25﴾ |
| 26 பிறகு, பூமியைப் பிளந்தோம். | ثُمَّ شَقَقْنَا ٱلْأَرْضَ شَقًّۭا. ﴿26﴾ |
| 27 ஆக, அதில் தானியத்தை முளைக்க வைத்தோம். | فَأَنۢبَتْنَا فِيهَا حَبًّۭا. ﴿27﴾ |
| 28 இன்னும் திராட்சையையும், (பசுமையான) காய்கறிகளையும், | وَعِنَبًۭا وَقَضْبًۭا. ﴿28﴾ |
| 29 ஆலிவ் மரத்தையும், பேரீச்சை மரத்தையும், | وَزَيْتُونًۭا وَنَخْلًۭا. ﴿29﴾ |
| 30 அடர்ந்த தோட்டங்களையும், | وَحَدَآئِقَ غُلْبًۭا. ﴿30﴾ |
| 31 பழங்களையும், புற்பூண்டுகளையும், | وَفَٰكِهَةًۭ وَأَبًّۭا. ﴿31﴾ |
| 32 உங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும் பலனுள்ளவையாக இருப்பதற்காக (இந்த உணவுகளை எல்லாம் நாம் முளைக்க வைத்ததை மனிதன் சிந்திக்க வேண்டாமா)? | مَّتَٰعًۭا لَّكُمْ وَلِأَنْعَٰمِكُمْ. ﴿32﴾ |
| 33 ஆக, (செவிகளை) செவிடாக்கக்கூடிய சத்தம் வந்தால், | فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ. ﴿33﴾ |
| 34 அந்நாளில் மனிதன் தனது சகோதரனை விட்டு விரண்டோடுவான். | يَوْمَ يَفِرُّ ٱلْمَرْءُ مِنْ أَخِيهِ. ﴿34﴾ |
| 35 இன்னும், தனது தாயை விட்டும், தனது தந்தையை விட்டும், | وَأُمِّهِۦ وَأَبِيهِ. ﴿35﴾ |
| 36 இன்னும், தனது மனைவியை விட்டும், தனது பிள்ளைகளை விட்டும் (மனிதன் விரண்டோடுவான்). | وَصَٰحِبَتِهِۦ وَبَنِيهِ. ﴿36﴾ |
| 37 அந்நாளில், அவர்களில் ஒவ்வொரு மனிதனுக்கும், (மற்றவர்களை விட்டு) அவனைத் திருப்பிவிடுகின்ற (-அவனை கவனமற்றவனாக ஆக்கிவிடுகிற) காரியம் இருக்கும். | لِكُلِّ ٱمْرِئٍۢ مِّنْهُمْ يَوْمَئِذٍۢ شَأْنٌۭ يُغْنِيهِ. ﴿37﴾ |
| 38 அந்நாளில் (நல்லோரின்) முகங்கள் ஒளிரக்கூடியதாக, | وُجُوهٌۭ يَوْمَئِذٍۢ مُّسْفِرَةٌۭ. ﴿38﴾ |
| 39 சிரித்தவையாக, நற்செய்தி பெற்றவையாக இருக்கும். | ضَاحِكَةٌۭ مُّسْتَبْشِرَةٌۭ. ﴿39﴾ |
| 40 இன்னும், அந்நாளில் (பாவிகளின்) முகங்கள், அவற்றின் மீது புழுதி(கள் - அழுக்குகள்) இருக்கும். | وَوُجُوهٌۭ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌۭ. ﴿40﴾ |
| 41 தூசி(கள் இருள்கள், இழிவுகள்) அவற்றை மூடிக்கொள்ளும். | تَرْهَقُهَا قَتَرَةٌ. ﴿41﴾ |
| 42 இவர்கள்தான் பெரும் பாவிகளான நிராகரிப்பாளர்கள் ஆவார்கள். | أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْكَفَرَةُ ٱلْفَجَرَةُ. ﴿42﴾ |