الانشقاق
தமிழ் Translation with Arabic Quran Text
| தமிழ் | العربية |
|---|---|
| 1 மோசடிக்காரர்களுக்கு நாசம்தான். | إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتْ. ﴿1﴾ |
| 2 இன்னும், அது தன் இறைவனுக்குச் செவிசாய்த்துவிடும்போது; இன்னும், அது (அவனுக்கு) கீழ்ப்படிந்துவிடும்போது; | وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ. ﴿2﴾ |
| 3 இன்னும், பூமி விரிக்கப்படும்போது, | وَإِذَا ٱلْأَرْضُ مُدَّتْ. ﴿3﴾ |
| 4 இன்னும், அது தன்னில் உள்ளவற்றை (வெளியே) எறிந்து, காலியாகி விடும்போது, | وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ. ﴿4﴾ |
| 5 இன்னும், அது தன் இறைவனுக்குச் செவிசாய்த்துவிடும்போது, இன்னும், அது (அவனுக்கு) கீழ்ப்படியும்போது (மனிதனே நீ செய்த நன்மை, தீமையின் பலனை பார்ப்பாய்)! | وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ. ﴿5﴾ |
| 6 மனிதனே! நிச்சயமாக நீ உன் இறைவன் பக்கம் (சேருகிற வரை நல்லதை செய்வதில் அல்லது தீமை செய்வதில்) சிரமத்தோடு முயற்சிப்பவனாக இருக்கிறாய். ஆக, நீ அவனை (மறுமையில்) சந்திப்பாய். (அவன் உனது செயல்களுக்கு ஏற்ப உனக்குக் கூலி கொடுப்பான்.) | يَٰٓأَيُّهَا ٱلْإِنسَٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًۭا فَمُلَٰقِيهِ. ﴿6﴾ |
| 7 ஆக, யார் தன் வலக்கரத்தில் தன் பதிவேடு கொடுக்கப்பட்டாரோ (அவர்), | فَأَمَّا مَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ. ﴿7﴾ |
| 8 அவர் இலகுவாகவே கணக்குக் கேட்கப்படுவார். (அவருடைய அமல்கள் பற்றி இலகுவான கேள்விகள் கேட்கப்படுவார்.) | فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًۭا يَسِيرًۭا. ﴿8﴾ |
| 9 இன்னும், மகிழ்ச்சியானவராகத் தன் குடும்பத்தார் பக்கம் திரும்புவார். | وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهْلِهِۦ مَسْرُورًۭا. ﴿9﴾ |
| 10 ஆக, யார் தன் பதிவேடு தன் முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்பட்டானோ, | وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ وَرَآءَ ظَهْرِهِۦ. ﴿10﴾ |
| 11 (எனது அழிவே என தனது) அழிவை அவன் அழைப்பான். | فَسَوْفَ يَدْعُوا۟ ثُبُورًۭا. ﴿11﴾ |
| 12 இன்னும் சயீர் எனும் கொழுந்துவிட்டு எரிகிற நரகத்தில் நுழைந்து அவன் தீயில் எரிவான். | وَيَصْلَىٰ سَعِيرًا. ﴿12﴾ |
| 13 நிச்சயமாக அவன் (உலகத்தில்) தன் குடும்பத்தில் மகிழ்ச்சியானவனாக இருந்தான். | إِنَّهُۥ كَانَ فِىٓ أَهْلِهِۦ مَسْرُورًا. ﴿13﴾ |
| 14 நிச்சயமாக அவன், (தன் இறைவனிடம்) திரும்பிவரவே மாட்டான் என எண்ணினான். | إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ. ﴿14﴾ |
| 15 ஏனில்லை! (அவன் கண்டிப்பாக இறைவனிடம் வருவான்.) நிச்சயமாக அவனுடைய இறைவன் அவனை உற்று நோக்குபவனாக இருக்கிறான். | بَلَىٰٓ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرًۭا. ﴿15﴾ |
| 16 ஆக, செம்மேகத்தின் மேல் சத்தியமிடுகிறேன்! | فَلَآ أُقْسِمُ بِٱلشَّفَقِ. ﴿16﴾ |
| 17 இரவின் மீது சத்தியமாக! அது (தனக்குள்) ஒன்று சேர்த்தவை மீது சத்தியமாக! | وَٱلَّيْلِ وَمَا وَسَقَ. ﴿17﴾ |
| 18 சந்திரன் மீது சத்தியமாக! அது (பூரண நிலவாக) முழுமையடையும்போது, | وَٱلْقَمَرِ إِذَا ٱتَّسَقَ. ﴿18﴾ |
| 19 நீங்கள் கடினமான ஒரு நிலையிலிருந்து கடினமான இன்னொரு நிலைக்கு நிச்சயமாகப் பயணிப்பீர்கள். | لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍۢ. ﴿19﴾ |
| 20 ஆக, அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை. | فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ. ﴿20﴾ |
| 21 இன்னும், (அவர்களுக்கு என்ன நேர்ந்தது?) அவர்களுக்கு முன்னர் அல்குர்ஆன் ஓதப்பட்டால், அவர்கள் (இறைவனுக்கு) சிரம் பணிவதில்லை! | وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ ٱلْقُرْءَانُ لَا يَسْجُدُونَ ۩. ﴿21﴾ |
| 22 மாறாக, நிராகரிப்பாளர்கள் (இந்த குர்ஆனை) பொய்ப்பிக்கிறார்கள். | بَلِ ٱلَّذِينَ كَفَرُوا۟ يُكَذِّبُونَ. ﴿22﴾ |
| 23 அவர்கள் (தங்கள் உள்ளங்களில்) சேகரிப்பதை (-மறைப்பதை) அல்லாஹ் மிக அறிந்தவன். | وَٱللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ. ﴿23﴾ |
| 24 ஆக, துன்புறுத்துகிற தண்டனையைக் கொண்டு அவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக! | فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ. ﴿24﴾ |
| 25 (அவர்களில்) நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்தவர்களைத் தவிர, அவர்களுக்கு முடிவுறாத (கணக்கற்ற, குறையாத) நன்மை உண்டு. | إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍۭ. ﴿25﴾ |