البلد
தமிழ் Translation with Arabic Quran Text
| தமிழ் | العربية |
|---|---|
| 1 விடியற் காலையின் மீது சத்தியமாக! | لَآ أُقْسِمُ بِهَٰذَا ٱلْبَلَدِ. ﴿1﴾ |
| 2 இன்னும், (நபியே!) நீர் இந்த நகரத்தில் (எதிரிகளைத் தண்டிப்பதற்கு) அனுமதிக்கப்பட்டு இருக்கிறீர். | وَأَنتَ حِلٌّۢ بِهَٰذَا ٱلْبَلَدِ. ﴿2﴾ |
| 3 தந்தை மீதும், அவர் பெற்றெடுத்தவர்கள் மீதும் சத்தியமாக! | وَوَالِدٍۢ وَمَا وَلَدَ. ﴿3﴾ |
| 4 திட்டவட்டமாக, மனிதனை சிரமத்தில் (சிக்கிக் கொள்பவனாகவே) படைத்தோம். | لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَٰنَ فِى كَبَدٍ. ﴿4﴾ |
| 5 தன்மீது ஒருவனும் ஆற்றல் பெறவே மாட்டான் என்று (அவன்) எண்ணுகிறானா? | أَيَحْسَبُ أَن لَّن يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌۭ. ﴿5﴾ |
| 6 அதிகமான செல்வத்தை நான் அழித்தேன் என்று (அவன் பெருமையாக) கூறுகிறான். | يَقُولُ أَهْلَكْتُ مَالًۭا لُّبَدًا. ﴿6﴾ |
| 7 அவனை ஒருவனும் பார்க்கவில்லை என்று எண்ணுகிறானா? | أَيَحْسَبُ أَن لَّمْ يَرَهُۥٓ أَحَدٌ. ﴿7﴾ |
| 8 இரு கண்களை அவனுக்கு நாம் ஆக்கவில்லையா? | أَلَمْ نَجْعَل لَّهُۥ عَيْنَيْنِ. ﴿8﴾ |
| 9 இன்னும், ஒரு நாவையும், இரு உதடுகளையும் (அவனுக்கு நாம் படைக்கவில்லையா?) | وَلِسَانًۭا وَشَفَتَيْنِ. ﴿9﴾ |
| 10 இன்னும், இரு பாதைகளை அவனுக்கு வழிகாட்டினோம். | وَهَدَيْنَٰهُ ٱلنَّجْدَيْنِ. ﴿10﴾ |
| 11 ஆக, அவன் அகபாவைக் கடக்கவில்லை. | فَلَا ٱقْتَحَمَ ٱلْعَقَبَةَ. ﴿11﴾ |
| 12 (நபியே!) அகபா என்றால் என்னவென்று உமக்கு அறிவித்தது எது? | وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْعَقَبَةُ. ﴿12﴾ |
| 13 (அது,) ஓர் அடிமையை விடுதலை செய்தல், | فَكُّ رَقَبَةٍ. ﴿13﴾ |
| 14 அல்லது, கடுமையான பசியுடைய நாளில் உணவளித்தல், | أَوْ إِطْعَٰمٌۭ فِى يَوْمٍۢ ذِى مَسْغَبَةٍۢ. ﴿14﴾ |
| 15 (யாருக்கு என்றால்) உறவினரான ஓர் அனாதைக்கு, | يَتِيمًۭا ذَا مَقْرَبَةٍ. ﴿15﴾ |
| 16 அல்லது, மிக வறியவரான ஓர் ஏழைக்கு உணவளித்தல் (அகபாவை கடப்பதாகும்). | أَوْ مِسْكِينًۭا ذَا مَتْرَبَةٍۢ. ﴿16﴾ |
| 17 (இத்தகைய புண்ணியத்தை செய்த) பிறகு, (அத்துடன்) அவர் நம்பிக்கையைக் கொண்டவர்களிலும், பொறுமையைக் கொண்டு உபதேசித்துக் கொண்டவர்களிலும், கருணையைக் கொண்டு உபதேசித்துக் கொண்டவர்களிலும் ஆகிவிட வேண்டும். | ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَتَوَاصَوْا۟ بِٱلصَّبْرِ وَتَوَاصَوْا۟ بِٱلْمَرْحَمَةِ. ﴿17﴾ |
| 18 இ(த்தகைய நன்மைகளை செய்த)வர்கள் வலப்பக்கமுடையவர்கள் (-சொர்க்க வாசிகள்) ஆவார்கள், | أُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلْمَيْمَنَةِ. ﴿18﴾ |
| 19 இன்னும், எவர்கள் நம் வசனங்களை நிராகரித்தார்களோ அவர்கள் இடப்பக்கமுடையவர்கள் (நரகவாசிகள்) ஆவார்கள். | وَٱلَّذِينَ كَفَرُوا۟ بِـَٔايَٰتِنَا هُمْ أَصْحَٰبُ ٱلْمَشْـَٔمَةِ. ﴿19﴾ |
| 20 (அவர்கள் நரகத்தில் தள்ளப்பட்டப்பின் அந்த) நரகம் அவர்கள் மீது மூடப்படும். (அதற்கு வாசல்களோ ஜன்னல்களோ இருக்காது.) | عَلَيْهِمْ نَارٌۭ مُّؤْصَدَةٌۢ. ﴿20﴾ |