Loading date... | Loading Hijri date... | Loading time...

الليل

தமிழ் Translation with Arabic Quran Text

தமிழ் العربية
1 சூரியன் மீது சத்தியமாக! அதன் பகல் மீது சத்தியமாக! (ழுஹா: பகல், முற்பகல், வெளிச்சம்) وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰ. ﴿1﴾
2 பகல் மீது சத்தியமாக, (வெளிச்சத்துடன்) அது வெளிப்படும் போது! وَٱلنَّهَارِ إِذَا تَجَلَّىٰ. ﴿2﴾
3 ஆணையும் பெண்ணையும் படைத்தவன் மீது சத்தியமாக! وَمَا خَلَقَ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰٓ. ﴿3﴾
4 (மனிதர்களே!) நிச்சயமாக உங்கள் முயற்சி (-உழைப்பு) பலதரப்பட்டதாக இருக்கிறது. إِنَّ سَعْيَكُمْ لَشَتَّىٰ. ﴿4﴾
5 ஆக, யார் தர்மம் புரிந்தாரோ, இன்னும், அல்லாஹ்வை அஞ்சினாரோ, فَأَمَّا مَنْ أَعْطَىٰ وَٱتَّقَىٰ. ﴿5﴾
6 இன்னும், (இஸ்லாம் எனும்) மிக அழகிய (மார்க்கத்)தை உண்மைப்படுத்தினாரோ, وَصَدَّقَ بِٱلْحُسْنَىٰ. ﴿6﴾
7 அவருக்கு சொர்க்கப் பாதையை நாம் இலகுவாக்குவோம். فَسَنُيَسِّرُهُۥ لِلْيُسْرَىٰ. ﴿7﴾
8 ஆக, யார் கஞ்சத்தனம் செய்தாரோ, (அல்லாஹ்வின் அருளை விட்டுத் தன்னை) தேவையற்றவனாகக் கருதினாரோ, وَأَمَّا مَنۢ بَخِلَ وَٱسْتَغْنَىٰ. ﴿8﴾
9 இன்னும், (இஸ்லாம் எனும்) மிக அழகிய (மார்க்கத்)தை பொய்ப்பித்தாரோ, وَكَذَّبَ بِٱلْحُسْنَىٰ. ﴿9﴾
10 அவருக்கு நரகத்தின் பாதையை இலகுவாக்குவோம். فَسَنُيَسِّرُهُۥ لِلْعُسْرَىٰ. ﴿10﴾
11 அவர் (நரகத்தில்) விழும்போது, அவனுடைய செல்வம் அவனுக்குப் பலனளிக்காது (-அவனை விட்டும் அல்லாஹ்வின் தண்டனையை தடுக்காது). وَمَا يُغْنِى عَنْهُ مَالُهُۥٓ إِذَا تَرَدَّىٰٓ. ﴿11﴾
12 நிச்சயமாக (நன்மையை, தீமையை பிரித்தறிவித்து) வழிகாட்டுதல் நம்மீது கடமை ஆகும். إِنَّ عَلَيْنَا لَلْهُدَىٰ. ﴿12﴾
13 நிச்சயமாக மறுவுலக வாழ்க்கையும் இந்த உலக வாழ்க்கையும் நமக்கே உரியது! وَإِنَّ لَنَا لَلْءَاخِرَةَ وَٱلْأُولَىٰ. ﴿13﴾
14 ஆக, கொழுந்துவிட்டெரிகிற நெருப்பை உங்களுக்கு அச்சமூட்டி எச்சரித்தேன். فَأَنذَرْتُكُمْ نَارًۭا تَلَظَّىٰ. ﴿14﴾
15 அதில் எரிய மாட்டான், பெரிய தீயவனைத் தவிர. لَا يَصْلَىٰهَآ إِلَّا ٱلْأَشْقَى. ﴿15﴾
16 அவன் (நம் மார்க்கத்தை) பொய்ப்பித்தான்; இன்னும், புறக்கணித்தான். ٱلَّذِى كَذَّبَ وَتَوَلَّىٰ. ﴿16﴾
17 இன்னும், அல்லாஹ்வை அதிகம் அஞ்சுகிறவர் அதிலிருந்து தூரமாக்கப்படுவார். وَسَيُجَنَّبُهَا ٱلْأَتْقَى. ﴿17﴾
18 அவர் மனத்தூய்மையை (அல்லாஹ்விடம் நன்மையை) நாடியவராக தன் செல்வத்தை (தர்மம்) கொடுக்கிறார். ٱلَّذِى يُؤْتِى مَالَهُۥ يَتَزَكَّىٰ. ﴿18﴾
19 யார் ஒருவருக்கும் பிரதி பலன் செய்யும்படியான உபகாரம் ஏதும் அவரிடம் இருக்காது. وَمَا لِأَحَدٍ عِندَهُۥ مِن نِّعْمَةٍۢ تُجْزَىٰٓ. ﴿19﴾
20 எனினும், அவரோ உயர்ந்தவனான தன் இறைவனின் முகத்தைத் தேடியே தர்மம் செய்வார். إِلَّا ٱبْتِغَآءَ وَجْهِ رَبِّهِ ٱلْأَعْلَىٰ. ﴿20﴾
21 இன்னும், (அல்லாஹ்வின் வெகுமதியால்) திட்டமாக அவர் திருப்தியடைவார். وَلَسَوْفَ يَرْضَىٰ. ﴿21﴾