Wednesday, 12 August 2026 Hijri: 06:36:33 pm
MalayalamQuran.in
അധ്യായം 5. സൂറത്തുല്‍ മാഇദ (Ayath 42-45) കണ്ണിനു കണ്ണ്, കാതിന് കാത് — Islamonweb - : Quranonweb അധ്യായം 5. സൂറത്തുല്‍ മാഇദ (Ayath 37-41) മോഷ്ടിച്ചവന്‍റെ കൈ മുറിക്കണം — Islamonweb - : Quranonweb അധ്യായം 5. സൂറത്തുല്‍ മാഇദ (Ayath 32-36) വസീല - ഗുഹയില്‍ കുടുങ്ങിയ 3 പേര്‍ — Islamonweb - : Quranonweb തഫ്സീറുൽ ബൈളാവി: അവലംബം, ഉള്ളടക്കം, സമീപനംe — Islamonweb - : Tafseer തഫ്സീറുൽ കശ്ശാഫ്: പണ്ഡിതര്‍ എന്ത് പറയുന്നു? — Islamonweb - : Tafseer അൽ ജദീദ് ഫീ ഇഅ്ജാസിൽ ഖുർആൻ: ബൂഥ്വിയൻ ദർശനങ്ങളുടെ വിപ്ലവാത്മക രീതിശാസ്ത്രം — Islamonweb - : Tafseer ഹദീസ്: ഒരു സാമൂഹിക സമീപനം — Islamonweb - : Hadith ഹദീസ് സംരക്ഷണത്തിൽ അഹ്മദ് അലി സഹാറൻപൂരിയുടെ സംഭാവനകള്‍ — Islamonweb - : Hadith ഹദീസ് രംഗത്തെ മലബാറിന്റെ സംഭാവനകള്‍ — Islamonweb - : Hadith ഹംറാ അൽഅസദ്: പതറാത്ത വിശ്വാസത്തിന്റെ ചരിത്രസാക്ഷ്യം — Islamonweb - : Seerahonweb അധ്യായം 5. സൂറത്തുല്‍ മാഇദ (Ayath 42-45) കണ്ണിനു കണ്ണ്, കാതിന് കാത് — Islamonweb - : Quranonweb അധ്യായം 5. സൂറത്തുല്‍ മാഇദ (Ayath 37-41) മോഷ്ടിച്ചവന്‍റെ കൈ മുറിക്കണം — Islamonweb - : Quranonweb അധ്യായം 5. സൂറത്തുല്‍ മാഇദ (Ayath 32-36) വസീല - ഗുഹയില്‍ കുടുങ്ങിയ 3 പേര്‍ — Islamonweb - : Quranonweb തഫ്സീറുൽ ബൈളാവി: അവലംബം, ഉള്ളടക്കം, സമീപനംe — Islamonweb - : Tafseer തഫ്സീറുൽ കശ്ശാഫ്: പണ്ഡിതര്‍ എന്ത് പറയുന്നു? — Islamonweb - : Tafseer അൽ ജദീദ് ഫീ ഇഅ്ജാസിൽ ഖുർആൻ: ബൂഥ്വിയൻ ദർശനങ്ങളുടെ വിപ്ലവാത്മക രീതിശാസ്ത്രം — Islamonweb - : Tafseer ഹദീസ്: ഒരു സാമൂഹിക സമീപനം — Islamonweb - : Hadith ഹദീസ് സംരക്ഷണത്തിൽ അഹ്മദ് അലി സഹാറൻപൂരിയുടെ സംഭാവനകള്‍ — Islamonweb - : Hadith ഹദീസ് രംഗത്തെ മലബാറിന്റെ സംഭാവനകള്‍ — Islamonweb - : Hadith ഹംറാ അൽഅസദ്: പതറാത്ത വിശ്വാസത്തിന്റെ ചരിത്രസാക്ഷ്യം — Islamonweb - : Seerahonweb
Quran translation reader

അത്തക്വീർ التكوير At-Takwir

Surah 81 മക്കിയ്യ • مكية • Makkiyah 29 ആയത്തുകൾ • 29 Ayahs

സൂറത്ത് അത്തക്വീർ (At-Takwir), ഖുർആൻ അധ്യായം 81 — അറബി ആയത്തുകളും தமிழ் വിവർത്തനവും ഉൾപ്പെടെ 29 ആയത്തുകൾ വായിക്കുക. Read Surah At-Takwir with Arabic text and தமிழ் translation.

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
1

(நபி முகம் சுளித்து) கடுகடுத்தார், இன்னும் புறக்கணித்தார்,

إِذَا ٱلشَّمۡسُ كُوِّرَتۡ ۝١
2

இன்னும், நட்சத்திரங்கள் உதிர்ந்து விழுந்துவிடும்போது,

وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتۡ ۝٢
3

இன்னும், மலைகள் அகற்றப்படும்போது,

وَإِذَا ٱلۡجِبَالُ سُيِّرَتۡ ۝٣
4

இன்னும், நிறைமாத ஒட்டகங்கள் கவனிப்பற்று விடப்படும்போது,

وَإِذَا ٱلۡعِشَارُ عُطِّلَتۡ ۝٤
5

இன்னும், காட்டு மிருகங்கள் ஒன்று திரட்டப்ப(ட்டு அவை எல்லாம் மரணிக்க வைக்கப்ப)டும்போது,

وَإِذَا ٱلۡوُحُوشُ حُشِرَتۡ ۝٥
6

இன்னும், கடல்கள் நிரம்பி வழிந்து பெருக்கெடுத்து ஓடும்போது (இவ்வுலகம் முடிவுறும்).

وَإِذَا ٱلۡبِحَارُ سُجِّرَتۡ ۝٦
7

இன்னும், ஆன்மாக்கள் (நல்லோர் நல்லோருடன் சொர்க்கத்திலும், பாவிகள் பாவிகளுடன் நரகத்திலும்) ஜோடி சேர்க்கப்படும்போது,

وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتۡ ۝٧
8

இன்னும், (உயிருடன்) புதைக்கப்பட்ட பெண் குழந்தை விசாரிக்கப்படும்போது,

وَإِذَا ٱلۡمَوۡءُۥدَةُ سُئِلَتۡ ۝٨
9

அவள் எந்தக் குற்றத்திற்காக கொல்லப்பட்டாள்? என்று.

بِأَيِّ ذَنۢبٖ قُتِلَتۡ ۝٩
10

இன்னும், (செயல்கள் எழுதப்பட்ட) ஏடுகள் விரிக்கப்படும்போது,

وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتۡ ۝١٠
11

இன்னும், வானம் கழட்டப்பட்டு, பிடுங்கப்பட்டு, பிறகு சுருட்டப்படும்போது,

وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتۡ ۝١١
12

இன்னும், நரகம் கடுமையாக எரிக்கப்படும் போது,

وَإِذَا ٱلۡجَحِيمُ سُعِّرَتۡ ۝١٢
13

இன்னும், சொர்க்கம் சமீபமாக்கப்படும் போது,

وَإِذَا ٱلۡجَنَّةُ أُزۡلِفَتۡ ۝١٣
14

ஒவ்வொரு ஆன்மாவும் (நல்லது அல்லது கெட்டதில்) தான் எதைக் கொண்டு வந்ததோ அதை அறிந்து கொள்ளும்.

عَلِمَتۡ نَفۡسٞ مَّآ أَحۡضَرَتۡ ۝١٤
15

ஆக, (பகலில்) மறைந்துவிடுபவை மீது சத்தியம் செய்கிறேன்!

فَلَآ أُقۡسِمُ بِٱلۡخُنَّسِ ۝١٥
16

விரைந்து வேகமாகச் செல்கின்றவை, பிறகு, சென்ற பாதையில் அப்படியே திரும்பிவருகின்றவை (மீது சத்தியமாக!)

ٱلۡجَوَارِ ٱلۡكُنَّسِ ۝١٦
17

இரவின் மீது சத்தியமாக! அது பின்னோக்கி செல்லும்போது,

وَٱلَّيۡلِ إِذَا عَسۡعَسَ ۝١٧
18

பகலின் வெளிச்சத்தின் மீது சத்தியமாக! அது தெளிவாகி விடும்போது,

وَٱلصُّبۡحِ إِذَا تَنَفَّسَ ۝١٨
19

நிச்சயமாக இது (-இந்த குர்ஆன்) கண்ணியத்திற்குரியவரான தூதர் (ஜிப்ரீல்) உடைய கூற்றாகும் (-அவர் மூலம் இறக்கப்பட்ட இறை வேதமாகும்).

إِنَّهُۥ لَقَوۡلُ رَسُولٖ كَرِيمٖ ۝١٩
20

(அவர்) பலமுடையவர், அர்ஷுடையவனிடம் பதவி உடையவர்.

ذِي قُوَّةٍ عِندَ ذِي ٱلۡعَرۡشِ مَكِينٖ ۝٢٠
21

அங்கு (வானவர்களின்) கீழ்ப்படிதலுக்கு உரியவர், (அல்லாஹ்விடம்) நம்பிக்கைக்குரியவர். (அத்தகைய வானவத் தூதர் ஜிப்ரீல் வாயிலாக இறக்கப்பட்ட கூற்றாகும் இந்த குர்ஆன்.)

مُّطَاعٖ ثَمَّ أَمِينٖ ۝٢١
22

உங்கள் தோழர் (-நபி முஹம்மத்) பைத்தியக்காரராக இல்லை.

وَمَا صَاحِبُكُم بِمَجۡنُونٖ ۝٢٢
23

இன்னும், திட்டவட்டமாக தெளிவான அடிவானத்தில் அவர் (-நபி முஹம்மத்) அவரை (-ஜிப்ரீலை) கண்டார்.

وَلَقَدۡ رَءَاهُ بِٱلۡأُفُقِ ٱلۡمُبِينِ ۝٢٣
24

மறைவானவற்றில் (-அல்லாஹ் இறக்கிய வேதத்தை மக்களுக்கு கற்பிப்பதில்) அவர் கஞ்சனாக (-குறைவு செய்பவராக, மறைப்பவராக) இல்லை.

وَمَا هُوَ عَلَى ٱلۡغَيۡبِ بِضَنِينٖ ۝٢٤
25

இன்னும், அது (-அந்த குர்ஆன், அல்லாஹ்வின் கருணையிலிருந்து) தூக்கி எறியப்பட்ட ஷைத்தானின் கூற்றாக இல்லை.

وَمَا هُوَ بِقَوۡلِ شَيۡطَٰنٖ رَّجِيمٖ ۝٢٥
26

ஆக, (இதனை விட்டு) நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?

فَأَيۡنَ تَذۡهَبُونَ ۝٢٦
27

இது இல்லை, அகிலத்தார்களுக்கு ஓர் அறிவுரையாகவே தவிர!

إِنۡ هُوَ إِلَّا ذِكۡرٞ لِّلۡعَٰلَمِينَ ۝٢٧
28

உங்களில் நேர்வழி நடக்க நாடியவருக்கு (அது அறிவுரையாகும். அவர் அதன் மூலம் நல்லறிவு பெறுவார்).

لِمَن شَآءَ مِنكُمۡ أَن يَسۡتَقِيمَ ۝٢٨
29

அகிலத்தார்களின் இறைவனான அல்லாஹ் நாடினால் தவிர, (நீங்கள் நல்லறிவு பெற) நாடமாட்டீர்கள்.

وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلۡعَٰلَمِينَ ۝٢٩